Saturday, June 25, 2011

ஆரண்ய காண்டம் - எது தேவையோ அது தர்மம்


படத்தின் பெயர், மற்றும் முதல் காட்சி: கி பி 400 சாணக்யன்: "எது தேவையோ அது தர்மம்" இவை இரண்டையும் வைத்து படத்தை வரலாறோடு முடி போட்டு விடாதீர்கள்!

படத்தை பார்த்தபோது "நீ புடுங்குறது அம்புட்டும் தேவை இல்லாத ஆணிதான்" - என்றுதான் தோன்றியது!

இப்போது கிபி 2011இல் சாணக்யன் இருந்தால் அவன் இப்படித்தான் சொல்லி இருப்பான்:

"எதை நாம் தேவை என்று நினைக்கிறோமோ அது நமக்கு தர்மமாக படும்!" என்று.

உதாரணத்திற்கு படத்தின் உச்சகட்ட இறுதிக்காட்சி: "சப்பை ஒரு புழு அவன் சொன்னது சரிதான், ஆடு புல்ல திங்கும், புலி ஆட்ட திங்கும்!வாழ்க்கைன்னா அப்படித்தான் - என்பது சப்பையின் மரணத்திற்கு சாக்காக முன் வைக்கப்படுகிறது!" - எதிர்பாராத திருப்பம், இயல்புக்கு மாறான முடிவு என்று நினைத்து, guilt free murder ஐ justify செய்தது சரியாக படவில்லை!

JK, பாலு மகேந்திரா, பாலா போன்றவர்கள் ராவாக ஒரு விஷயத்தை எடுக்கும்போது கூட மனிதம் அங்கு தனித்து நிற்கும்! கடைசி நிமிடத்தில் மனசு மாறிய customer இடம் காசு வாங்க மறுத்து ரோட்டில் வீசி எரிந்து விட்டு செல்லும் பரத்தையை தன் சிறுகதையில் படம் பிடிக்கும் JK, எந்த logicஉம் இல்லாமல் மன நிலை சரியில்லாத ஒரு பெண்ணை மிக மோசமான நிலையில் இருந்து மீட்டு, பராமரித்து தன்னையும் அறியாமல் அவள் அறியாமையை நேசித்து, அவள் தன்னை பிரிந்து போகிறாள் எனும்போது நொந்து போய் அதிர்ந்து அழுது புரளும் கதாபாத்திரத்தை வடித்த பாலுமகேந்திரா, தன் ஒட்டு மொத்த கௌரவத்தையும், EGO வையும் தூக்கி எரிந்து விட்டு ஒரு சாதாரண குடிசையில் வாழும் இரண்டு ஜீவன்களுக்காக தரை இறங்கி வரும் ஒரு மாபெரும் highness ஐ திரையில் கொடுத்த பாலா.

ஆரண்ய காண்டமும் ஒரு ராவான படம்தான்! சிங்கிள் லைன் மூவி! காலையில் கலவியில் ஆரம்பித்து ஒரு பெண்ணின் விடுதலையில் முடியும் படம்!

ஒவ்வொரு இடத்திலும் எடிட்டர் மிக அருமையாக செய்திருப்பதாக சிலாகித்தான் நண்பன்! படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கேட்டபோது மற்றொரு நண்பன் படத்தில் மெசேஜ் எல்லாம் கிடையாது என்று சொல்ல, மேசெஜோ கதையையோ எதிர்பார்க்காத நான், ஏதோ ஒன்று மனதில் நிற்காமல் தொக்கி நிற்பதாக உணர்ந்து யோசித்தபோது தான் படம் புரிந்தது!

சிறு communication gap இல் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது! ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று பாஸ் சொல்வதை எதிர்ப்பதால் ரிஸ்க் எடுத்து, பொருளையும் எதிர்த்தவனையும் தூக்க திட்டமிடும் பாஸ் கதாபாத்திரத்தில்  ஜாக்கி ஷராப் - தேர்ந்த நடிப்பு, மனதில் ஒட்டாத தாதா முகம்! Sorry director - Nativity was missing a bit! முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்களின் டையலாக் டெலிவரி நன்றாக வரவேண்டும் என்றால் கட்டாயம் அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும்! அல்லது அந்த மொழி பேசுபவர்களை நன்றாக உள்வாங்கி இருக்க வேண்டும்!


கதையின் கதாநாயகன் பசுபதி கதாபாத்திரமாக கொள்ளலாம். சிக்கலில் இருந்து தப்பிக்க திட்டம் இட்டு வெற்றி பெறும் இந்த கதாபாத்திரத்தை மிக நன்றாக செய்து வெற்றிபெற்றிருக்கிறார் சம்பத்!

எனக்கு தேவை பணம் மற்றும் அய்யா உயிர்! இதற்காக மனசாட்சியை கூட விற்க தயார் என்று துணியும் ஒரு கதாபாத்திரம் தான் மிகப்பெரிய சறுக்கல்! எல்லாரும் செண்டிமெண்டாக லாரி மோதி இறக்க போகிறாள், சப்பை ஆவி அவளை பார்த்து சிரிக்க இவளுக்கு புத்தி வந்து இறந்த பின் சப்பையோடு இணைகிறாள், சப்பையும் மன்னித்து ஏற்று கொண்டு வெள்ளை தேவதைகளோடு வானத்தில் கலக்க "The End" slide போடுவார்கள் என்று எதிர்பார்ப்பது சகஜம்! அதை மாற்றி "guilt free" soul ஆக அந்த கதாபாத்திரத்தை காண்பித்திருப்பது புதுமை பட் மனசு ஒத்துக்க மாட்டேங்குது!

At the least, லாரி கிராஸ் செய்தபின் ஒரு நிமிடம் சப்பையின் பிரிவை எண்ணி வருந்தி, பிறகு தன்னிலைக்கு வந்து கண்ணீரை துடித்த படியே பயணிப்பதாக காண்பித்திருக்கலாம்!

உயிர்வாழ தேவையானவைகளை தேவை என்று வகைப்படுத்தினால், உயிர்வாழ வெறும் நாலு இட்டிலி கொஞ்சம் சட்டினி போதும் - இல்லையா?

ஐம்பது லட்சம், இரண்டு கோடி சரக்கு எல்லாம் ஓவர்!

மொத்த படத்தில் மிக அருமையாக நடித்திருப்பது ஜமீந்தாரும் அந்த சிருவனும்தான்! காஞ்ச படத்தில் கொஞ்சம் கொஞ்சம் பசுமை - இவர்களின் மூலம் கிடைத்த நகைச்சுவை!

ஆனது ஆச்சு! இத்தோட விட்டுடலாம்னு கை கொடுக்க வர்ற இடத்துல - வலி, எப்படியாவது இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நினைப்பு, அதே நேரத்தில் தப்பு செய்வது நீர்தான் நானில்லை என்ற ஒரு சாதாரண மனிதனின் மனப்போக்கு என்று இயக்குனரும் சரி, நடிகரும் சரி பின்னி எடுத்திருக்கிறார்கள்!

மனதில் நிற்க ஒன்றுமில்லாத - பல சறுக்கல்களை தாண்டி எழுந்து நிற்கிறார் இயக்குனர்!

Tuesday, May 17, 2011

வரும் வழியில், காலை வெயிலில்!

=============================
ஜனநாயகமே
இனி சுதந்திரமாக நடைபோடு,
இது அன்னையின் தமிழ்நாடு
- கழக மணிகளின் குசும்பு
=============================
First day in office CM has held an orientation meeting to re-instate the belief that the elected members can deliver all the election promises if they all work hard enough and stay focused. In all the meetings the person who was an adviser to APJ Abdul Kalam in his presidential cadre said to have presented ppts to elected members
=============================
எனக்கு தெரிந்தவர், தெமுதிக முதல் முறை சட்டசபை உருப்பினரிடம் உதவி கேட்கப்போய் இருக்கும்பொது, அந்த இளைஞர், "நான் இன்னும் பதவிப்பிரமாணமே எடுக்கவில்லை, இனிமேல்தான் என் "Capacity" என்ன என்று எனக்கு தெரிய வரும், தெரிந்த பின் என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை கண்டிப்பாக செய்கிறேன்" என்று உறுதி அளித்திருக்கிரார்

எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான் என்றாலும், சிறிதும் கூச்சமின்றி படோடோபமின்றி, தனக்கு தெரியாததை தெரியாது என்று ஒத்துகொள்ளும் இந்த சட்டசபை உறுப்பினர் மேல் மரியாதையும், அதே சமயம், இம்முறை முதல்வருக்கு வலுவான சட்டசபை உறுப்பினர்கள் கிடைக்கவில்லையோ என்ற வறுத்தமும் எழுகிறது!

வலுவான சட்டசபை உறுப்பினர்கள் மட்டும் என்ன கிழித்து விட்டார்கள் என்று அங்கலாய்என்று நீங்கள் அங்கலாய்ப்பதுகேட்கிறது! அவர்கள் தங்கள் அதிகார பலத்தை சொத்துக்குவிப்பிலும், குடும்ப க்ஷேமத்திற்கும்தான் முதலில் செலவிட்டார்கள் என்பது திண்ணம். அதே நேரத்தில் முதல் முறை சட்டசபை உறுப்பினர்கள் நிறைந்த(20+) அவைக்கு திரம்பட செயலாற்றுவதற்கு சிறிது நேரம் பிடிக்கத்தான் செய்யும், என்பது ஒரு மைனஸ் பாயிண்ட்தான்!
=============================
எனக்கு என்னவோ போட்டி போட்டுக்கோண்டு எல்லோரும் நல்லது செய்ய நினைக்கிறார்களோ என்றும்  தோன்றுகிறது!
=============================
வாழ்க தமிழகம், வாழ்க பாரத மணித்திருநாடு

Friday, April 22, 2011

Ko - A Nice attempt by K V Anand

Not sure if its KV Anand's idea or jeeva himself felt it - but he underplaying has actually helped the story a lot! I could only see Jeeva as one of the character! Infact Ajmal scored completely in the second half! Its a complete sweep!

Also saw Jeeva's home production trailer for his next film - Routhram! He looked a lot better!

Jeeva was looking better in the nice costumes than Karthika! Actually in the first duet, I was like why the hell she? And only when my friend said its Radha's daughter I understood her choice! Must have got lot of backup from her mom! She performed nicely as a reporter! Its just her costumes in the duet didn't go well for her physique!

Piya was wonderful!

I luved all the camera work by KV!

In the title I think it was from his album - may be his personal fav!

So if you are a shutter bug and if you have decided to go for Ko, please ensure you are there in the theater atleast 15 minutes before to ensure you are not missing the title!

Saw a Lamborgini parked outside! A huge fans following it and waiting to see who owns it!

We wanted to pee after the movie for obvious reasons - it was lashing outside - rain in the mid summer - 23-Apr-2011 - is welcomed by all!!! But the Sathyam staffs wouldn't allow and everybody was murmring and were on thier way out. I just went to the staff in the snacks counter and enquired. He said there is some shooting going on!

I can connect these two now! The Lamborgini must be one of the star's car who had come for the shooting! - I mean could be!